“கண் சிமிட்டல் அழகி” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட மலையாள நடிகை பிரியா வாரியார் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்ய பட்டு உள்ளார்.
“கண் சிமிட்டல் அழகி” :
பிரியா வாரியரை பற்றி விளக்கி கூற வேண்டிய அவசியம் இல்லை. கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்த பிரியா தனது முதல் படம் “ஒரு அடர் லவ்” மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். அந்த படத்தின் பாடல் ஓன்றில் அவர் தன் முக பாவனைகளால் கவர்ந்து இழுத்து இருப்பார்.
இதனால் அவருக்கு மலையாளம் மட்டும் அன்றி பல ரசிகர்கள் இருந்து வந்தனர். ‘ஃபைனல்ஸ்’ என்ற மலையாள படத்தில் ‘ நீ மழவில்லு போலென்’ என்ற பாடலை, பாடகர் நரேஷ் ஐயருடன் பாடியதின் மூலம் அவர் ஒரு பாடகியாகவும் மாறியுள்ளார்.
ஆனால், “ஒரு அடர் லவ்” படத்திற்கு பின் பெரிதாக எந்த வாய்ப்புகளும் இல்லாமல் இருந்து வந்தார்.
புதிய படவாய்ப்பு:
மலையாளத்தின் பிரபல இயக்குனர் வி.கே.பிரகாஷ் அவர் இயக்க போகும் புதிய படமான ” நால்பது காரண்டே இருபத்தியௌன்றுகாரி” என்ற படிவத்தில் பிரியா வாரியரை ஒப்பந்தம் செய்து உள்ளார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இந்த படத்தின் நாயகனாக குணச்சித்திர நடிகரும் கதாசிரியான அனுப் மேனன் நடிக்கிறார். படத்தின் தலைப்பின் மூலம் கதை தெரியப்படுத்தும் விதமாக உள்ளது. அதாவது, 40 வயது மனிதனும் 21 பெண், இவர்களின் காதல் கதை என்பது.