அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0
rain weather

வடக்கு கேரளா முதல் வடக்கு மஹாராஷ்டிரா வரை நிலவும் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை அறிக்கை

வடக்கு கேரளா முதல் வடக்கு மஹாராஷ்டிரா வரை 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேலும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#INDWvsSAW ஒரு நாள் தொடர் – தென் ஆப்ரிக்கா அணிக்கு 249 ரன்கள் இலக்கு!!

மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் குன்னூர், கெட்டி, வால்பாறை, தென்காசி, உதகமண்டலம், ஸ்ரீவைகுண்டம், கோத்தகிரி, பாபநாசம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் மழையளவு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here