#INDWvsSAW ஒரு நாள் தொடர் – தென் ஆப்ரிக்கா அணிக்கு 249 ரன்கள் இலக்கு!!

0

தற்போது இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா பெண்கள் அணிகள் தங்களது ஒரு நாள் தொடரை விளையாடி வருகின்றனர். இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 248 ரன்களை குவித்துள்ளனர்.

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா:

இந்தியாவிற்கு வந்த தென்னாபிரிக்கா பெண்கள் அணி தற்போது ஒரு நாள் போட்டிகளை விளையாடி வருகின்றனர். கடந்த போட்டியில் இந்திய பெண்கள் அணியின் சிறப்பான செயல்பாட்டினால் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் ஜெமிமா 0, ஸ்ம்ரிதி 25, மித்தாலி ராஜ் 36, ஹர்மான்ப்ரீட் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழக சட்டமன்ற தேர்தல் – அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு மரியாதையை செலுத்தும் ஸ்டாலின்!!

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பூனம் 77 ரன்களை குவித்து ஆட்டமிழந்துள்ளார். தற்போது 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 248 ரன்களை குவித்து தனது 5 விக்கெட்களை இழந்துள்ளது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி 36 மற்றும் சுஷ்மா 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது தென் ஆப்ரிக்க பெண்கள் அணி 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here