தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழை – வானிலை மையம் தகவல்!!

0

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

01.02.2021 மற்றும் 02.02.2021 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மேலும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 03.02.2021 முதல் 05.02.2021 வரை தமிழகம், புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழகத்தில் காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காட்சியளிக்கும். காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் லேசாக மழை பெய்துள்ளது.

‘எனக்கு இந்த வீட்டில இருக்கவே பிடிக்கல, எங்கேயாச்சும் போயிடுறேன்’ – மூர்த்தியோடம் கதறும் கண்ணன்!!

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

01.02.2021 முதல் 03.02.2021 வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் ஆகிய பகுதிகளில் தென் கிழக்கு திசையிலிருந்து பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே கடலுக்குள் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here