வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பருவநிலை மாற்றம்:
கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இதனால், இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
கடலூர், புதுவை, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானிலை மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
மழை பதிவு:
கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் குறைந்த பட்சமாக 3 செ.மீ மலை பதிவாகி உள்ளது என்றும், அதிகாபட்சமாக 9 செ.மீ மலை பதிவாகி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவிலஞ்சி, பந்தலூர்,தேவாலா மற்றும் வால்பாறை பகுதிகளில் பெய்த மழையின் பதிவு.