Friday, May 17, 2024

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் – துப்பாக்கி சண்டையில் பாதுகாப்புபடை வீரர் வீரமரணம்!!

Must Read

புல்வாமா பகுதியில் பயங்கவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். மேலும், பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.

பயங்கரவாதிகள் நடமாட்டம்:

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது. இதனை, தடுப்பதற்கு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டு தான் வருகின்றது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

jammu and kashmir updates
jammu and kashmir updates

இப்படியான சூழ்நிலையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கம்ரசிபோரா பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்கள் தெரிவிப்பட்டது. அதனால், அங்கு விரைவாக சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

திடீர் தாக்குதல்:

அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், திடீர் என்று வீரர்களை தாக்கி உள்ளனர், அதுவும் துப்பாக்கி கொண்டு. இதனால் விரைவாக செயல்பட்ட வீரர்கள் திருப்பி துப்பாக்கி சண்டை நடத்தி உள்ளனர். இதில், ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு கொன்றனர். இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

காட்டின் தூண் யானைகள் – இன்று உலக யானைகள் தினம்!!

அந்த தீவிரவாதிகளிடம் இருந்து ஒரு ஏ.கே-47 துப்பாக்கி, கையெறி குண்டுகள், மற்றும் பல ஆயுதங்களும் கைப்பற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., பாமாயில் & துவரம் பருப்பு கிடைப்பதில் சிக்கலா? அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் பல்வேறு ரேஷன் கடைகளிலும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -