Saturday, May 4, 2024

9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Must Read

தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்தில் 9 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம்:

தமிழகத்தில் கடந்த மாதம் ஆரம்பத்தில் மழை பெரிய ஆரம்பித்தது. இதற்கு வெப்பச்சலனம் மற்றும் கீழடுக்கு சுழற்சி தான் காரணம் என்று கூறப்பட்டது. தொடர்ந்து பரவலாக தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அணைகளிலும் நீர்வரத்து அதிகமாக உள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கு எங்கு மழை:

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் உள்ள சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், கரூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில மாவட்டங்களில் மிதமாக மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனுக்கு 1 ரூபாய் அபராதம் – வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக 9 செ.மீ மழை பதிவுசெய்யப்பட்டுள்ளது, மேலும் குறைந்தபட்சமாக 1.9 செ.மீ பதிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -