தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் ஐந்து மாவட்டங்களுக்கு ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழை
கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாகத்தான் தமிழ்நாட்டில் வெயில் முகம் தெரிகிறது. டிசம்பர் மாதம் ஆரம்பித்த கனமழை தற்போதுதான் குறைந்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கனமழை காணப்பட்ட அதே இடங்களில் மீண்டும் மழை பெய்யவாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தில் கிழக்கு திசை காற்றலைகளால் வரும் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆரவாரம் – பிப்ரவரி 1 வரை ஒத்திவைப்பு!!
தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் அறிவிக்கப்படுள்ளது. தொடர்ந்து மன்னர் வளைகுடா மற்றும் குமரி கடற்கரை பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்துக்குள் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.