தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு வரும் 3ம் தேதி அன்று தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். தற்போது தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சிம்பு:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. இப்போதைய காலங்களில் இவரது படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் குடியேறியுள்ளார் சிம்பு. மேலும் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சிம்பு வரும் 3ம் தேதி அன்று தனது 38வது பிறந்தநாளை காண உள்ளார். தற்போது இதனை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, இந்த லாக்டௌன் காலத்தில் வேகமாக படமாக்கப்பட்ட படம் தான் ஈஸ்வரன். அதற்கு என் ரசிகர்களாகிய நண்பர்கள் அளிக்கும் வரவேற்பை பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் என்னுடன் இருப்பவர்கள் நீங்களும் உங்கள் அன்பும் தான்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆரவாரம் – பிப்ரவரி 1 வரை ஒத்திவைப்பு!!
அதனால் மட்டுமே என்னால் விரைவாக படம் நடிக்கவும் உடல் எடையை குறைக்கவும் முடிந்தது. மேலும் எனது பிறந்தநாள் அன்று நான் உங்களுடன் இருக்கவேண்டும். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் நான் வெளியூர் செல்கிறேன். எனவே எனது குடும்பங்களாகிய ரசிகர்கள் யாரும் என் வீட்டிற்கு வந்து ஏமாந்து போகவேண்டாம். நாம் விரைவில் சந்திக்கும் தருணத்தை உருவாக்குகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தனது பிறந்தநாள் அன்று மாநாடு திரைப்படத்தின் டீஸர் வெளியாக உள்ளது என்று அறிவித்துள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை தனது டிவீட்டர் பக்கம் மூலம் தெரிவித்தார்.