மும்பையில் புறநகர் மின்சார ரயில் சேவை – பிப்ரவரி முதல் இயக்கம்!!

0

கொரோனா தொற்றின் நிமித்தமாக இந்தியாவில் போக்குவரத்து சேவைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது மும்பையில் ரயில் சேவை மீண்டுமாக துவங்கவுள்ளது.

ரயில் சேவை துவக்கம்

இந்தியாவில் கொரோனா ஊரடங்கினால் நாடு முழுவதும் பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பேருந்து போக்குவரத்து சேவைகள் துவங்கியது. தொடர்ச்சியாக ரயில் மற்றும் விமான சேவைகளும் ஆரம்பித்தன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பேரறிவாளன் விடுதலை வழக்கு – ஆளுநர் இன்று அல்லது நாளை முடிவு!!

மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்குள் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது மும்பையிலுள்ள புறநகர் மின்சார ரயில் சேவைகள் மீண்டுமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. மும்பையில் பிப்ரவரி 1 முதல் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் மின்சார ரயில் சேவைகள் துவங்கப்படும் என மும்பை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக ரயில்களில் உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது நினைவு கூறத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here