பெரும்பாலான மக்கள் விரும்பி செல்லும் சுற்றுலா தலங்களில் ஒன்று தான் குற்றாலம் அருவி. இது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. ஆனால் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 16 வயது சிறுவன் அஸ்வின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.இதனால் குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிக்க படுத்திருந்த நிலையில் தற்போது ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
மக்களே உஷார்.. தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!
அதாவது குற்றாலத்தில் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி என்றும், மெயின் அருவி கரையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ஓரிரு நாளில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.இந்த தகவல்களை அறிந்த சுற்றுலா பிரியர்கள் குற்றாலத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்