மீண்டுமொரு நாய்க்கடி சம்பவம்., 2 சிறுவர்கள் உயிரிழப்பு?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0

பொதுவாக சாலையோரங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், மக்களை கடித்து வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்களை அச்சுறுத்தும் வகையில் தெருக்களில் திரியும் நாய்களை பிடிக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு விண்ணம்பூண்டி கிராமத்தில் தெரு நாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் .

கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள கால்நடைகள் மற்றும் ஆட்களையும் தெரு நாய்கள் கடித்து வருவதால், விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நாய் கடி சம்பவம் அக்கிராம பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here