வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசையில் ஏற்பட்டுள்ள சுழற்சிக் காரணமாக நாளை தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து 19ம் தேதி நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரைப்பகுதிகளில் நிலவும் சுழற்சிக் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் பணியில் மேலும் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் – தமிழக அரசு நியமனம்!!
நாளை மற்றும் நாளை மறுநாள் மன்னர் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் தென்காசி மற்றும் நீலகிரி பகுதிகளில் மழையளவு சென்டிமீட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.