பொங்கலன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
tn weather forecast
tn weather forecast

மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை:

மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விருதுநகர், தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலேயே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனத்திற்கு எதிராக முல்லையை தூண்டிவிடும் மீனா – பரபரப்பான கதைக்களத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 28 செ.மீ மழை பதிவாகியுள்ளது, புவனகிரி, திண்டுக்கல் மாவட்டத்தில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக சேரன்மாதேவி மற்றும் அரியலூர் பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இன்று குமரிக்கடல், கேரளா கடல் பகுதிகளில் சூறாவளி காற்று அதிகபட்சமாக 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மீனவர்கள் கவனமுடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here