பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தனம் கர்ப்பமாக இருந்ததை அடுத்து அது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்ததும் தனத்தை தங்குகின்றனர். மேலும் முல்லை தான அனைவர்க்கும் சமைக்கிறார். இதனால் வீட்டில் பல குளறுபடிகள் ஏற்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த வாரம் முழுக்க பல மகிழ்ச்சியான விஷயங்களாக நடந்து கொண்டுள்ளது. தனத்தை பற்றி தவறாக புரிந்துகொண்டு வீட்டை விட்டு சென்ற மீனா கர்ப்பமான விஷயம் தெரிந்ததும் சந்தோசத்துடன் வீட்டிற்கு வருகிறார். ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி வீட்டில் பாத்ரூம் கட்ட ஏற்பாடுகள் செய்கின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் மீனா அதையும் தவறாக புரிந்துகொள்கிறார். நான் கர்ப்பமாக இருக்கும்போது இதெல்லாம் நடக்கவே இல்லை. இப்போ தனம் அக்கா கர்ப்பமா இருந்ததால இதெல்லாம் செய்றாங்க என்று நினைத்து குமுறுகிறார். இதனை ஜீவாவிடம் சொல்லியும் பலனில்லை. மேலும் இத்தனை நாட்கள் தனம் தான் சமைத்துக்கொண்டிருந்தார்.
பக்கத்தில் இருந்து உதவிகள் மட்டும் செய்துகொண்டிருந்த முல்லைக்கு சமைப்பதற்கான அளவும் தெரியவில்லை. முத்தைய எபிசோடில் கூட முல்லை சமைக்கிறேன் என்ற பெயரில் ஒரு குட்டி கலாட்டாவே செய்து விட்டார். ஆனாலும் மீனா வாய் தான். உட்கார்ந்த இடத்தை விட்டு அசையவே இல்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி சுற்று?? லீக்கான வோட்டிங் லிஸ்ட்!!
இன்றைய எபிசோடில் மீனா வீட்டில் தனத்திற்கு மட்டும் பாத்ரூம் காட்டுகின்றனர் என்று சொல்ல கலையும் மீனாவை ஏற்றி விடுகிறார்.அடுத்ததாக முல்லை வழக்கம் போல சாப்பாட்டிற்கு அளவு கேட்டு கொண்டிருக்க அனைவரும் கிண்டல் செய்கின்றனர். அப்பொழுது கதிரும் அங்கே வர முல்லைக்கு டி போட கற்றுக்கொடுக்கிறார்.
அங்கேயும் ஒரு ரொமான்ஸ் சீன் வர அனைவர்க்கும் சித்ராவின் நியாபகம் வருகிறது. அடுத்ததாக முல்லைசமைத்துக்கொண்டிருக்க மீனா உள்ளே வந்து முல்லையை ஏத்தி விட பார்க்கிறார். ஆனாலும் முல்லை தனத்திற்கு சப்போர்ட் செய்ய நீங்களும் திருந்த மாட்டீங்க என்று சென்று விடுகிறார்.
அடுத்ததாக அனைவரும் குழந்தையை கொஞ்சிக்கொண்டுள்ளனர். அப்பொழுது கடையில் வேலை முடிந்து ஜீவா, கதிர், மூர்த்தி வீட்டிற்கு வருகின்றனர். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருக்க இன்றைய நிகழ்ச்சி கலைக்கட்டியுள்ளது என்றே சொல்லலாம்.