பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் வெற்றியாளரை நிர்ணயிக்கும் அந்த இறுதி சுற்று எப்பொழுது நடக்க போகிறது என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் 100 நாட்கள் முடிய சில நாட்களே உள்ளது. இந்நிலையில் இதுவரையிலும் வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்குள் வர ஆரம்பித்துள்ளனர். நேற்றைய எபிசோடில் கூட பாலா சம்யுக்தா மற்றும் சுசித்ராவை பார்த்ததும் கண்கலங்கிய விட்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆரம்பித்தில் இருந்த முரட்டு தனமான பாலாஜி இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மாறி இந்த அளவிற்கு மாறி இருக்கிறார். ஆரியும், பாலாஜியும் முட்டிக்கொண்டதை அடுத்து தற்போது இருவருக்கும் இடையே ஒரு அழகான உறவு உருவாகியுள்ளது. நேற்று ரேகா கூட தனது அப்பாவின் நினைவுகளை பற்றி பேசி அனைவரையும் கண்கலங்க வைத்தார்.
பொங்கலன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
இப்பொழுது இந்த போட்டியின் இறுதி கட்டத்தை 6 போட்டியாளர்கள் கடந்துள்ளனர். சோம், ஆரி, பாலாஜி, ரியோ, ரம்யா மற்றும் கேபி போன்றோர் இறுதி போட்டியில் இடம் பெற்றுள்ளனர். இப்பொழுது பாலாஜி மற்றும் ஆரிக்கு அதிக சப்போர்ட் எழுந்து வருகிறது. ரியோ ஆரம்பத்தில் இருந்தே இப்படியே விளையாடி இருந்தால் கண்டிப்பாக ஜெயிக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
மேலும் ரம்யா போன வாரத்தில் கேபிக்கு முன்பு தான் காப்பாற்றப்பட்டார். அதாவது 5 வது போட்டியாளராக இடம் பெற்றுள்ளார் ரம்யா. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரும் ஜனவரி 17 ஆம் தேதி ஞாயிற்று கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளது. தொடர்ந்து வோட்டிங் லிஸ்டில் ஆரி தான் முன்னிலையில் உள்ளார். எனவே ஆரி தான் ஜெயிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது தெரிகிறது.