விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான எஃப்.ஐ.ஆர் திரைப்படம் இன்று வெளியாகிய நிலையில் மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் மட்டும் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளனர். இதனால் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு விஷ்ணு விஷால் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.
மன்னிப்பு கேட்ட விஷ்ணு விஷால்:
பிரபல இயக்குனரான கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர் மனு ஆனந்த் தற்போது விஷ்ணு விஷாலை வைத்து எஃப்.ஐ.ஆர் என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பலரால் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் இன்று திரையரங்கங்களில் வெளியாகிறது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார் மற்றும் ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து சில காட்சிகள் இடம் பெற்றதாக எதிர்ப்பு கிளம்பியது. பல தடைகளையும் தாண்டி இறுதியாக இந்த திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தினை வெளியிட மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடை விதித்துள்ளனர். இந்த திரைப்படத்தினை பெரிதும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த வெளிநாட்டு வாசிகளிடம் மன்னிப்பு கேட்டு ஒரு டிவீட் ஒன்றை விஷ்ணு விஷால் பதிவு செய்துள்ளார்.
???
Sorry #MALAYSIA and #KUWAIT audience… https://t.co/mUDZA3mJK4— IRFAN AHMED (ABA) (@TheVishnuVishal) February 10, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்