நடிகர் விஷால் இரண்டு வருடங்களாக பிரபல தயாரிப்பு நிறுவனத்தை அலைக்கழித்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நடிகர் விஷால்
நடிகர் விஷால் லத்தி படத்தை தொடர்ந்து மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றது. சமீப காலமாக நடிகர் விஷால் நடித்து வெளியாகும் எந்த திரைப்படங்களும் சரியாக ஓடுவதில்லை. அதனால் மார்க் ஆண்டனி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வரும் விஷால் தயாரிப்பாளர்களிடம் சண்டை இடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நடத்தி வரும் ஸ்டோன் பெஞ்சர்ஸ் ப்ரொடக்சன் சார்பில் உருவாகும் படத்தில் நடிப்பதாக அட்வான்ஸ் வாங்கியுள்ளார். ஆனால் இரண்டு வருடங்களாக எந்த பதிலும் சொல்லாமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ளார் விஷால். இந்த நிலையில் ஸ்டோன் பெஞ்சர்ஸ் ப்ரொடக்சன் நிறுவனம் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு விஷாலை மடக்கி பிடித்துள்ளனர்.
என்ன அமலா மொத்தமா குறைச்சுடீங்க.., எல்லாமே தெரியுதே.., கண்டபடி ஆட்டம்போடும் வீடியோ!!
அதாவது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஷால் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி நடிக்க விஷால் ஒப்புக்கொண்டால் ஸ்டோன் பெஞ்சர்ஸ் ப்ரொடக்சன் நிறுவனத்திடம் அவர் வாங்கிய அட்வான்ஸை கழித்து விடலாம் என்று திட்டம் தீட்டியுள்ளனர். மேலும் இப்படம் குறித்து கூடிய விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.