ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விராட் கோலி அரைசதம் அடித்ததன் மூலம், தனது சொந்த மண்ணில், 4000 ரன்களை அடித்த 4வது இந்திய வீரரானார்.
விராட் கோலி:
அகமதாபாத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி, 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி உள்ள, இந்திய அணியில், ரோஹித் சர்மா 35, புஜாரா 42 என சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேறினர். மறுபுறம் நிதானமாக விளையாடிய, சுப்மன் கில் 128 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து, விராட் கோலியுடன் ஜடேஜா இணைந்து விளையாடினார். இதில், விராட் கோலி தொடர்ந்து பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்து அசத்தி உள்ளார். இதன் மூலம், தனது சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 4000 ரன்கள் கடந்த 5வது இந்திய வீரரானார். அதுவும் குறைந்த (50) இன்னிங்ஸில் 4000 ரன்களை கடந்து விராட் கோலி அசத்தியுள்ளார்.
WPL 2023: யாருக்கு கிடைக்கும் ஊதா நிற கேப்?? அதிக விக்கெட்டுகளை எடுத்த டாப் 5 லிஸ்ட் இதோ!!
இதற்கு முன், சச்சின் டெண்டுல்கர் 94 இன்னிங்ஸில் 7216, ராகுல் டிராவிட் 70 இன்னிங்ஸில் 5598, சுனில் கவாஸ்கர் 65 இன்னிங்ஸில் 5067, வீரேந்திர சேவாக் 52 இன்னிங்ஸில் 4656 ரன்கள் எடுத்து முதல் 4 இடங்களில் உள்ளனர்.