மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திற்கு ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், ஆறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன்
இயக்குனர் மணிரத்னம் படைப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக் குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் படக் குழுவினர் விருது பெறுவதற்காக ஹாங்காங் சென்று உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஹாங்காங்கில் நாளை நடைபெற இருக்கும் 16 வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
மீண்டும் சீரியலில் களமிறங்கும் ‘திருமதி செல்வம்’ பிரபலம் – ரசிகர்கள் வாழ்த்து!!
மேலும் இந்த விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த எடிட்டிங், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் என ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்ட் 1 பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை வாங்குவதற்காக படக்குழுவினர் ஹாங்காங் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.