தமிழக இல்ல தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் திட்டத்தை, இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
உரிமை தொகை :
தமிழகத்தில் இல்ல தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமை தொகை வழங்கும் திட்டம், கடந்த 20 மாதங்களாக இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அந்த வகையில் கடந்த மகளிர் தினத்தின் போது, இது குறித்த அறிவிப்பு வெளியிட்ட ஸ்டாலின் விரைவில் இத் திட்டம் அமல்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆத்தூர் தாலுகாவில் நடந்த, அரசு விழாவில் பங்கேற்று 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பொருட்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பேசிய அவர், மகளிருக்கான உரிமை தொகை ரூ.1000 குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்றும், முதல்வரை இத்திட்டத்தை அறிவிப்பார் என தெரிவித்தார்.
இதையடுத்து, வரும் ஜூன் 3ம் தேதி, இத்திட்டம் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர். இதை வைத்துப் பார்க்கும்போது, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இது சார்ந்த அறிவிப்பு நிச்சயம் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.