இந்தியாவில் சில்லறை பரிவர்த்தனைகளை அதிகப்படுத்த ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இதில் நீண்ட நாள் பொதுமக்களின் புழக்கத்தில் இருக்கும் சில நோட்டுகள் சில நேரங்களில் கிழிந்து விடும் நிலை ஏற்படுகிறது. இந்த கிழிந்த நோட்டுகளை வங்கி உள்ளிட்ட இடங்களில் மாற்று வசதி இருந்தாலும், ஒரு சிலருக்கு இது எட்டா கனியாகவே அமைந்து விடுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இவர்களுக்காக சிதைந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் பழைய நாணயங்களை மாற்றி புழக்கத்தில் உள்ள நாணயங்களை வழங்க ரிசர்வ் வங்கி அவ்வப்போது முகாம்களை நடத்தி வருகிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு அவசர தேவைகளின் போது இதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இந்த அவல நிலையை போக்க SBI வங்கி, ரிசர்வ் வங்கியுடன் கைகோர்த்துள்ளது. அதன்படி கோவை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள SBI கிளையில் வங்கி செயல்படும் அனைத்து வேலை நாட்களிலும் பழுதான ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
தமிழக பொதுத் தேர்வர்களே கவனம்., மறந்தும் இதை செய்யாதீங்க! மீறினால் இனி பரீட்சை எழுத முடியாது!!
இந்த அறிய வாய்ப்பு வங்கி வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவருக்கும் உண்டு என்ற அருமையான அறிவிப்பை கூறியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பாதி கிழிந்த, எரிந்த நிலையில் உள்ள ரூபாய் நோட்டுகளையும், ரூ.10 வரை மதிப்புள்ள பழைய நாணயங்களையும் மாற்றிக்கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது. இதனால் பல தரப்பட்ட மக்களும் SBI வங்கிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.