இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரை இந்திய அணி 2- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து டி20 தொடரின் முதல் போட்டியையும் வென்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2வது T20 போட்டி நாளை (நவம்பர் 26) அரங்கேற உள்ளது. இந்த நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து ஓர் முக்கிய தகவல் கசிந்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடர், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விராட் மற்றும் ரோஹித்-க்கு ஓய்வலிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து ஓர் தகவல் கசிந்துள்ளது. அதாவது எதிர்வரும் 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இளம் வீரர்களை தேர்வு செய்வதற்காக பரிசோதனையில் இருப்பதால் அந்த இரு வீரர்களுக்கும் ஓய்வு அளித்து இருப்பதாக தெரிகிறது. தற்போது இந்த கருத்து இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
தொடர் வெற்றியை நோக்கி இந்தியா.. மழையால் போட்டி தடைபடுமா?? முழு விவரம் இதோ.!