இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், சீனியர் வீரர்களான விராட், ரோஹித் ஓய்வில் உள்ள நிலையில், சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், 2 வது ஒருநாள் போட்டி சஞ்சு சாம்சனின் சொந்த ஊரான கேரளாவில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நாளை (நவம்பர் 26) நடைபெற இருக்கிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த மைதானம், பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இரு அணிகளின் அதிரடியான பேட்டிங்கை காணலாம். மேலும், ஒரு அணியின் ஸ்கோர் 160 ரன்களுக்கு மேல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு வானிலை நிலவரமும் கைகொடுக்க கூடும். அதாவது, கடந்த சில தினங்களாக கேரளாவில் மழை பெய்து வந்தது. ஆனால், நாளை (நவம்பர் 26) வானம் மேகமூட்டத்துடன் இருக்குமே தவிர 26 டிகிரி செல்சியஸுக்கு வெப்பம் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மணிக்கு 8 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால் 74% ஈரப்பதத்துடன் மைதானம் இருக்கும். இதனால், மழைக்கு 5% மட்டுமே வாய்ப்பு உள்ளது.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் 2023: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்..!