கர்நாடகா மாநிலத்தில் அருகே உள்ள ஹொன்னாளி காசினகெரே கிராமத்தைச் சேர்ந்த திப்பேஷ் என்பவர் இரவு நேரத்தில் வீட்டிற்கு பைக்கில் வேகமாக சென்ற போது, எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடி வந்துள்ளது. அதை பார்த்த திப்பேஷ் நாய் மீது பைக் ஏறி விட கூடாது என்பதற்காக பைக்கை வளைத்து ஓட்ட முயன்ற போது கீழே விழுந்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இந்த விபத்தை ஏற்படுத்திய நாய் இறந்த வீட்டுக்கு சென்று அங்கேயே சுற்றி திரிந்துள்ளது. மேலும் இறந்தவரின் தாயின் முன் சென்று மன்னிப்பு கேட்கும் விதமாக தனது கால்களை தூக்கி வழங்கியுள்ளது. அதை பார்த்து உருகிய தாய் உன்மேல் எந்த தவறும் இல்லை என்று நாயின் தலையை தடவி விட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.