வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி – குடுமபத்திற்கு நிதியுதவி!!

0

பிரபல சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மாரடைப்பு காரணமாக நேற்று சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு திரைஉலகினருக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி வடிவேல் பாலாஜி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

வடிவேல் பாலாஜி:

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சூட்டிங்கில் மயங்கி விழுந்த வடிவேல் பாலாஜி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்தன. இதனால் சில நாட்கள் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வடிவேல் பாலாஜி, நேற்று தீடிரென அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட நாளே அவரது உயிர் பிரிந்தது. அவரது குடும்பத்தினரிடம் போதிய பண வசதி இல்லாத காரணத்தால் தான் அரசு மருத்துவமனையில் சேர்த்ததாக கூறப்படுகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அவரது உடல் சென்னை சேத்துப்பட்டி எம்எஸ் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. 42 வயதான அவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து வடிவேல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவரது குடும்பத்திற்கு நிதியுதவியும் வழங்கி உள்ளார்.

தனது நகைச்சுவையால் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த கலைஞன் இளம் வயதில் இவ்வளவு துயரங்களை அனுபவித்து உயிரிழந்து இருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here