அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர் சேர்க்கை – தமிழக அரசு அனுமதி!!

0

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் கூடுதலாக 20 சதவீத மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டு உள்ளது. இதனால் கிராமப்புறத்தில் இருந்து அதிகளவில் மாணவர்கள் பட்டப்படிப்பு பயில வாய்ப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இறுதிப்பருவம் தவிர பிற செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இறுதிபருவ தேர்வுகள் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் ஆன்லைன் அல்லது நேரில் வந்து எழுதும் முறையில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டிற்கான கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இம்முறை கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு கல்லூரி கல்வி இயக்குனர் வைத்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, அரசு கலைப் பாடப்பிரிவிற்கு கூடுதலாக 20 சதவீதமும், அறிவியல் பாடப்பிரிவிற்கு ஆய்வக வசதியை பொறுத்து கூடுதலாக 20 சதவீத மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் கிராமப்புற மற்றும் நகரங்களில் வசிக்கும் வசதி குறைவான மாணவர்கள் பட்டப்படிப்பு பயிலும் வாய்ப்புகள் அதிகரித்து உள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here