வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய ஜோடி அரையிறுதி ஆட்டத்தில் மலேசிய அணியிடம் தோல்வியடைந்தது.
பேட்மிண்டன் ஓபன் தொடர்
வியட்நாம் பேட்மிண்டன் ஓபன் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான ஆட்டத்தில் இந்திய ஜோடி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சிக்கி ரெட்டி-ரோகன் கபூர் ஜோடி, மலேசியாவின் LA குசுமாவதி, ஆர் என் குஷர் ஜந்தோ ஜோடியை எதிர்கொண்டனர்.
இந்த இரு ஜோடிகளுக்கு இடையில் நடந்த விறுவிறுப்பு ஆட்டத்தில் 16-21, 14-21 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தி, மலேசிய ஜோடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய ஜோடி தோல்வி அடைந்ததன் மூலம் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கான ஆட்டத்தில் எஸ். குடமா, எம்ஆர்பி இஸ்பஹானி ஜோடி, சீனாவின் எக்ஸ். ரென்,கே. டான் ஜோடியை எதிர்கொண்டனர். இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் 14-21, 17-21 என்ற கணக்கில் சீன ஜோடி வெற்றி பெற்று அசத்தியது.