தற்போது வனிதா பீட்டர் பால் பற்றிய சர்ச்சைகள் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை விமர்சித்தும் பல விடியோக்கள் வெளியாகி வருகின்றனர். தற்போது வனிதா பீட்டர் பாலுக்கு கோவாவில் என்ன பிரச்சனை நடந்தது என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
வனிதா பீட்டர் பால்
பிக் பாஸ் மூலம் அறிமுகமான வனிதா தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மேலும் லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார் வனிதா. ஏற்கனவே திருமணம் ஆன பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்துகொண்டார். இதனால் பல பிரச்சனைகள் எழுந்தன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்பொழுது பிறந்த நாளை கொண்டாட கோவா சென்ற வனிதா பீட்டர் பால் தம்பதிக்கு இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்தனர். இதனை தயாரிப்பாளரான ரவீந்தர் முதன்முதலில் வெளியிட்டார். அதன் பிறகு வனிதாவே இருவரும் பிரிந்ததற்கான காரணத்தை வெளியிட்டார்.
இந்த விடியோவை பார்த்த பலரும் இதனை பொய் என்றும் கூறி வந்தனர். சிலர் அவருக்கு ஆதரவாக பேசினாலும் வனிதா பீட்டர் பால் இடையே கோவாவில் அப்படி என்ன தான் நடந்தது?? என்று பலருக்கும் கேள்வி குறியாகவே உள்ளது. அதை பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதாவது கோவாவிற்கு சென்ற வனிதா பீட்டர் பால் அங்கு சந்தோசமாக இருந்த போட்டோக்களை எல்லாம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் வனிதா அவருக்கு குடிப்பழக்கம் அதிகமாகி விட்டது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது என்று கூறினார். ஆனால் தற்போது வெளியான தகவலின் படி பீட்டர் பாலுக்கு ஒரு போன் கால் வந்துள்ளது.
அதை வனிதா எடுத்து பேசியுள்ளார். பீட்டர் பாலின் அண்ணன் இறந்த செய்தியை சொல்வதற்காக பீட்டர் பால் எங்கே என்று கேட்டுள்ளனர். கோபமடைந்த வனிதா பீட்டர் பால் என்று இங்கு யாரும் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஏன் இப்படி செய்தாய் என்று பீட்டர் பால் வணிதாவிடம் கேட்டுள்ளார். அதற்கு வனிதா உங்களுக்கு எங்களை விட அந்த குடும்பம் தான் முக்கியமாக போய்விட்டதா?? என்று கேட்டு சண்டையிட்டுள்ளார். இதனால் தான் இருவருக்கும் பிரச்சனை ஆகியுள்ளது என்று கூறுகின்றனர்.