காமெடி நடிகரான வடிவேல் பாலாஜி விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். இவரின் இறப்பு திரையுலகை மட்டுமல்ல மக்கள் அனைவரையும் மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வடிவேல் பாலாஜி:
மதுரையில் பிறந்த வடிவேல் பாலாஜி நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சென்னைக்கு வந்தவர். யார் வேண்டுமானாலும் நடித்து விடலாம். ஆனால் காமெடி செய்து சிரிக்க வைப்பது ஒரு சிலரால் மட்டுமே முடிந்த ஒன்று. அப்படி நம் மனதை கொள்ளை கொண்டவர் தான் வடிவேல் பாலாஜி. ஆரம்பத்தில் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்கள் நடித்து வந்தார். அதன்பிறகு அவர் பிரபல சேனலான விஜய் டிவியில் கலக்கபோவது யாரு என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு அதில் டைட்டிலையும் கைப்பற்றினார்.
இதுவே அவரின் காமெடி பயணத்தின் முதல் வெற்றி. அதன்பிறகு பல ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். கலக்கல் சாம்பியன், ஜோடி நம்பர் ஒன், ஜில் ஜங் ஜக் போன்ற ஷோக்களில் கலந்து கொண்டார். இவரது காமெடி திறமையாலும், பேச்சாற்றறாலும் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
இவருக்கு 42 வயது ஆன நிலையில் இவருக்கு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை உள்ளது. இவர் பந்தயம் , சுட்டப்பழம் சுடாத பழம், கோலமாவு கோகிலா போன்ற படங்களிலில் காமெடியனாக நடித்துள்ளார். தற்போது இவரின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவினால் ஷூட்டிங்கில் திடீரென மயங்கி விழுந்த வடிவேல் பாலாஜி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பக்கவாதம் தாக்கி கை, கால்கள் செயலிழந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்க போதிய பணமின்றி குடும்பத்தினர் தவித்ததாகவும் கூறப்படுகிறது. பின்பு பண பற்றாக்குறை காரணமாக சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜி சிகிச்சை பலனின்றி காலமானார்.