மதுரையில் 14 வயது சிறுமியை 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்திய நிலையில், அதற்கு அவனது தாயும் துணைபுரிந்த சம்பவம் மக்களை கொதிப்படைய செய்துள்ளது.
ஒரு தலை காதல்:
மதுரையில் உள்ள சக்கிமங்கலம் சவ்ராஸ்ட்ரா பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். அவரது மனைவி பகவதி. இவர்களுக்கு 17 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். இவர்களது மகன் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
ஆனால், அந்த சிறுமி மறுப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் கோபத்தில் இருந்துள்ளார். அதே போல் தகுந்த சந்தர்பத்திற்காவும் காத்திருந்துள்ளார்.
சரமாரியான தாக்குதல்:
இப்படியாக இருக்க அந்த சிறுமி கல்மேட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பகவதி மற்றும் அவரது மகன் இருவரும் சிறுமியை வலுக்கட்டாயமாக தங்களது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டிற்கு சென்று அவரை ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். அப்போது பகவதி தனது மகனை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமியை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த சிறுமி மறுத்ததால் கோவம் அடைந்த அவர் சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
தனது மகன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததையும் அவர் தடுக்கவில்லை. இருவரும் தங்கள் வீட்டில் அவரை இரண்டு நாட்கள் பூட்டி வைத்து துன்பப்படுத்தி உள்ளனர். இதனை அறிந்த சிறுமியின் தந்தை இருவர் மீதும் போலீசில் புகார் அளித்துள்ளார். குற்றவாளிகள் இருவரையும் கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..