தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவிற்கு சமீபத்தில் பிறந்த நாள் முடிந்த நிலையில் அவரது திருமணம் பற்றி செய்தி ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இதனை கேட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
த்ரிஷா
சூர்யா நடித்த ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் த்ரிஷா. மிஸ் சென்னையாக இருந்த இவருக்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்து நாளடைவில் அவருக்கே போட்டியாக வளர்ந்தார் த்ரிஷா.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
விஜய் உடன் பல ஹிட் படங்களில் நடித்தவர் தான் இவர். மேலும்இவர் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர். இப்படி எல்லாம் இருக்க தற்போது அவருக்கு 35 வயதுக்கும் மேலாகி விட்டது. இவருக்கு எப்பொழுது திருமணம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே இவருக்கு இரண்டு தடவை திருமணம் வரை சென்று நின்று போனது. இப்பொழுது சமூக வலைத்தளங்களில் டாக் எல்லாமே த்ரிஷாவிற்கு எப்பொழுது திருமணம் என்று தான். இந்நிலையில் மே 4 திரிஷா பிறந்த நாளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு – மாநில அரசு அதிரடி அறிவுப்பு!!
மேலும் அவரது நெருங்கிய தோழியான ஷார்மி அடுத்த வருடத்தில் ஜோடியாக தான் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை வைத்து பார்க்கும்போது அவருக்கு வரன் தேடிக்கொண்டுள்ளனர் என்பது தெரிகிறது. அப்படி என்றால் கூடிய விரைவில் த்ரிஷாவிற்கு டும் டும் டும் தான்.