தமிழகத்தில் கனமழையால் தென் மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்கள் இந்த கனமழை காரணமாக பெரும் இன்னல்களை சந்தித்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் தமிழக அரசு இவர்களுக்கு நிவாரண தொகை வழங்குவதாக அறிவித்தனர். கடந்த சில தினங்களாக இந்த மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டத்தில் இதுவரை நிவாரணத் தொகை பெறாதவர்கள் நாளை நியாய விலை கடைகளில் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நிவாரண உதவித்தொகை பெற நாளை கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால் இன்னும் வாங்காத மக்கள் உடனடியாக நிவாரண உதவித் தொகையை ரேஷன் கடைகளில் வாங்கி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.