புத்தாண்டு (ஜனவரி 1) பண்டிகை முடிந்ததையடுத்து, தமிழக மக்கள் அனைவரும் தற்போது பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி உள்ளனர். வரும் ஜனவரி 15 ஆம் தேதி (திங்கள் கிழமை) முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஜனவரி 13 & 14 தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் தொடர்ந்து, 5 நாட்கள் விடுமுறை அளிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து, இந்த தொடர் விடுமுறையை வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர் மற்றும் குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக, ரயில் மற்றும் விரைவு பேருந்துகளில் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. தற்போது இந்த முன்பதிவு டிக்கெட் விற்பனை அனைத்தும் முடிந்த நிலையில், போக்குவரத்துக் கழகம் அறிவிக்கும் சிறப்பு பேருந்து வசதிகளை எதிர்நோக்கி மக்கள் உள்ளனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
இந்திய அணியின் டெஸ்ட் அட்டவணை வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!