தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நிலையில், தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. காலையில் வெயிலுடன் தொடங்கி மாலையில் மழை பொலிவுடன் முடிவடைகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் நாளை கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் லேசானது முதல் கனமான வரை மழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக போக்குவரத்து துறைக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்?? தொடரும் போராட்டம்!!