தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வழக்கத்தை விட தாமதமாகவே தொடங்கியது. இந்த கால தாமதத்தை ஈடு செய்வதற்காக, பெரும்பாலான சனிக்கிழமைகள் பள்ளி வேலை நாட்களாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து, தமிழகத்தின் திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்த சுற்றிக்கையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, ஆதிதிராவிட நல, தொடக்கம், நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் நாளை (அக்டோபர் 28) சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.