![தமிழகத்தில் வலுப்பெறும் நீட் விலக்கு மசோதா…, குடியரசுத் தலைவரின் முடிவு தான் என்ன?? தமிழகத்தில் வலுப்பெறும் நீட் விலக்கு மசோதா…, குடியரசுத் தலைவரின் முடிவு தான் என்ன??](https://enewz.in/wp-content/uploads/2023/10/fff-cmm.jpg)
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை ‘நீட்’-ஐ ரத்து செய்ய கோரி பல்வேறு மாநில அரசுகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வகையில், பல தொடர் போராட்டங்களை நடத்தி வந்த தமிழக அரசு, “நீட் விலக்கு – நம் இலக்கு” என்ற தலைப்பின் கீழ் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெரும் இயக்கத்தை நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த அக்டோபர் 21ம் தேதி தொடங்கி வைத்து.
Enewz Tamil WhatsApp Channel
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் இருந்து டெல்லி திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு சென்ற இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு- வை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நீட் விலக்கு குறித்து கோரிக்கை வைத்துள்ளார். அதாவது, “தமிழக மாணவர்களின் நலனை காக்க நீட் விலக்கு மசோதாவுக்கு தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று கடிதம் ஒன்றை முதல்வர் குடியரசு தலைவரிடம் கொடுத்துள்ளார்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஷாக்., நாளை இந்த மாவட்ட பள்ளிகள் செயல்படும்., வெளியான அறிவிப்பு!!