தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0

காற்று மாறுபாட்டின் காரணமாக தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

லேசான மழை

இன்று 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நீச்சல் உடையில் சைடு போஸில் கலக்கும் ஷிவானி – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

தொடர்ந்து 25 மற்றும் 26 தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானல், சங்கரன் கோவில், வால்பாறை பகுதிகளில் மழை அளவு சென்டி மீட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here