மாடலிங் அழகியான ஷிவானி நாராயணன் தற்போது தனது இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் காட்டு தீயாய் இணையத்தில் பரவி வருகின்றது. ரசிகர்கள் அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.
ஷிவானி நாராயணன்
சீரியல் மற்றும் மாடலிங் துரையின் மூலமாக ரசிகர்களின் மனதினை கவர்ந்தவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யபட்ட “பகல் நிலவு’ என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார்.
இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 46,951 பேர் பாதிப்பு!!
அந்த சீரியலில் நடிகர் அசாத் மற்றும் இவரது கெமிஸ்ட்ரிக்கு என்றே தனி ரசிகர்கள் இருந்து வந்தனர். அந்த சீரியலில் நடிக்கும் போது ஷிவானிக்கு மிகவும் சிறிய வயது தான், ஆனாலும், தனது தேர்ந்த நடிப்பின் காரணமாக இவர் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தினை பிடித்திருப்பார்.
இந்த சீரியலிற்கு பின்பாக, “சரவணன் மீனாட்சி” சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஷிவானிக்கு இயல்பாகவே நடனம் ஆடுவதில் கவனம் மற்றும் விருப்பம் இருந்த காரணத்தால் ‘ஜோடி” நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். பின்பு, இவர் தொடர்ந்து சீரியல்கள் நடிப்பதில் மிகவும் கவனம் செலுத்தினார். அசாத் மற்றும் இவரது கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால் இருவரும் “கடைக்குட்டி சிங்கம்” என்ற சீரியலில் நடித்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால், சில காரணங்களால் ஷிவானி அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். இந்த சீரியலை அடுத்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ரெட்டை ரோஜா” என்ற சீரியலில் இரு வேடங்களில் நடித்தார். தற்போது கடைசியாக இவர் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இப்படியாக இருந்தாலும், ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிடுவதில் அலாதி ஆர்வம். தற்போது மாலத்தீவுகள் சென்றிருக்கும் ஷிவானி ஸ்விம்மிங் பூலில் குளிப்பது போல் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.