இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 46,951 பேர் பாதிப்பு!!

0

இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு தற்போது கொரோனா பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்தியா கொரோனா பாதிப்பு:

கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த கொரோனா, தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை வீச துவங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு தற்போது இந்தியாவில் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. தற்போது இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,951 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1,16,46,081 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனாவால் சுமார் 212 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா காரணமாக 1,59,967 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து 21,180 பேர் குணமடைந்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இதனால் இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,51,468 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சுமார் 3,34,646 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் கடந்த 11 நாட்களில் 10,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுபோல் கடந்த 24 மணி நேரத்தில் 1.289 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3 வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here