தன்னை பற்றி வெண்பா பாரதியிடம் ஏற்றி விடுவதை கேட்டு விடும் கண்ணம்மா – அடுத்து நிகழப்போகும் விபரீதம் என்ன??

0

உறவுகளுக்கிடையேயான ஒற்றுமை கண்டுபிடிக்கும் போட்டியில் கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் முதலிடத்தை பிடிக்கிறார்கள். அதே நேரத்தில் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் டேஞ்சர் ஸோனுக்கு வந்துள்ளார்கள்.

மெகா சங்கமம்

இன்றைய மெகா சங்கமம் எபிசோடில் சரவணன் மற்றும் சந்தியாவிற்கு, உறவுகளுக்கிடையேயான ஒற்றுமை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதில் போன மாதம் வீட்டு கரன்ட் பில் எவ்வளவு என்று கேட்ட கேள்விக்கு இருவரும் வெவ்வேறு விதமாக பதிலளிக்க சந்தியா சரவணன் மீது தண்ணீர் ஊற்றுகிறார். அத்துடன் முதல் போட்டி முடிவுக்கு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்த போட்டிக்கான சுற்று என்டர்டைன்மெண்ட் ரவுண்ட் என அறிவிக்கப்படுகிறது. பின்பு சரவணன் சந்தியா இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் ஆதியும், பார்வதியும் வந்து கலாய்க்கிறார்கள். போட்டியில் கடைசி இடத்துக்கு வந்ததற்காக சந்தியாவை குற்றம் சாட்டுகிறார் பார்வதி. அடுத்த நாள் போட்டிக்கு பாட்டு பாடலாமா, டான்ஸ் ஆடலாமா என பிளான் போடுகிறார்கள் சரவணனும் சந்தியாவும்.

போட்டியில் முதலிடத்தில் வந்த கண்ணம்மா, சௌந்தர்யாவை அகிலும், அஞ்சலியும் பாராட்டுகிறார்கள். கண்ணம்மா நீதான் பெஸ்ட் மருமகள் என வேணு சொல்ல இந்த எட்டு வருசத்துல அத்தையை ஒவ்வொரு நாளும் நான் நெனச்சுட்டு இருந்தேன் என கண்ணம்மா கூறுகிறார். பின்பு அனைவரும் அடுத்த நாள் நடக்கும் போட்டியில் வக்கீல் வேடம் போடலாம் என பேசுகிறார்கள்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

சாமிக்கு முன்னாள் நின்று வெண்பா கோவத்தில் கத்திக்கொண்டிருக்கிறார். மறுபக்கம் பார்வதி, சந்தியா எல்லா போட்டிகளிலும் தோற்க வேண்டும் என வேண்டிக்கொண்டிருக்கிறார். சந்தியா, கண்ணம்மாவை தோற்கடிக்க பார்வதியும் வெண்பாவும் கை கோர்க்கிறார்கள். பிறகு அகிலை பற்றி அஞ்சலிக்கு எவ்வளவு தெரியும் என அகில் அஞ்சலிக்கு கேள்வி கேட்கிறார்.

அகில் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் அஞ்சலி சரியான பதிலை சொல்லுகிறார். அகில் மீது இருக்கும் ஆசையை அகிலிடம் அஞ்சலி கூறுகிறார். ஸ்விமிங்க் க்ளாஸ் போக ஸ்விம் சூட் வேணும் என துளசியிடம் சொல்லுகிறார் லட்சுமி. ஹோட்டல் ரெசார்ட்டில் தனியாக நின்று யோசித்து கொண்டிருக்கும் பாரதியிடம் கண்ணம்மாவை பற்றி ஏத்தி விடுகிறார் வெண்பா.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தவற்றை கண்ணம்மா கேட்டு விடுகிறார். காலை விடிந்ததும் டான்ஸ் போட்டிக்கு தனியாக ப்ராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறார் சரவணன். அங்கு வரும் பாரதி மற்றும் சரவணன் இருவரும் அன்னியோன்னியமாக பேசிக்கொள்கிறார்கள். போட்டியில் சரவணன் ஜெயிக்க வேண்டும் என வாழ்த்து சொல்லுகிறார் பாரதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here