தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1596 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் ஒருவர் கொரோனவால் உயிரிழந்து உள்ளார்.
தமிழக கொரோனா நிலவரம்:
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் – 1596 பேர்
- இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 18 பேர்
- இதுவரை சோதனை செய்யப்பட்ட மாதிரிகள் – 53,045
- நெகட்டிவ் ரிசல்ட் மாதிரிகள் – 43,582
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 178 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்து உள்ளது நம்பிக்கை அளிக்கக்கூடிய தகவலாக உள்ளது.
நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 76 பேரில் சென்னை 55, கோவை 1, செங்கல்பட்டு 3, நாமக்கல் 1, தஞ்சை 3, விழுப்புரம் 4, தென்காசி 5, திருவாரூர் 1, காஞ்சிபுரம் 1, நீலகிரி 2 பேருக்கு தாக்கம் உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |