முல்லைக்கு அட்வைஸ் செய்யும் மூர்த்தி., கதிரை கட்டிப்பிடித்து பாராட்டு! பாச மழையில் நனையும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

0
முல்லைக்கு அட்வைஸ் செய்யும் மூர்த்தி., கதிரை கட்டிப்பிடித்து பாராட்டு! பாச மழையில் நனையும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!
முல்லைக்கு அட்வைஸ் செய்யும் மூர்த்தி., கதிரை கட்டிப்பிடித்து பாராட்டு! பாச மழையில் நனையும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது மகிழ்ச்சி நிறைந்த சுவாரஸ்யமான கதைக்களத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் மீனா, தனம் மற்றும் ஐஸ்வர்யா மூவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். மீனா ஏதோ நகைச்சுவையாக சொல்ல தனம், ஐஸ்வர்யா இருவரும் சிரித்து கொண்டிருக்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பின்னர் குடும்பத்தில் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். பின் கண்ணன் வேலைக்கு கிளம்பி விடுகின்றார். ஜீவா கதிரிடம் ” நீ முல்லைக்கு துணையா வீட்டுல இரு, நான் கடையை பார்த்துகிறேன் ” என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். மீனா முல்லையிடம் ” இப்போ பரவல்லயா? உடம்பு எப்படி இருக்கு ” என்று கேட்கிறார். அதற்கு, முல்லை ” பரவால்லை ” என்று கூறுகிறார்.

அட்ரா சக்க.., விஜய் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.., “தளபதி 67” அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ்!!

இரவு அனைவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.அப்போது, கண்ணன் ” மூர்த்தி அண்ணன் எப்போ வருவார்? ” என்று தனத்திடம் கேட்கிறார். தனம் “இன்னும் கொஞ்சம் நேரத்தில வந்துடுவார் என்று கூறி கொண்டிருக்கும் போதே மூர்த்தி வந்துவிடுகிறார். பின்னர் மூர்த்தி, கதிரை சந்தோஷத்தில் கட்டிப்பிடித்து அழுகிறார். பின், கதிருக்கு வாழ்த்து சொல்லுகிறார். முல்லையிடம் ” இனி பார்த்து இருந்துக்கோமா, கனமா ஏதும் தூக்க கூடாது” என்று அறிவுரை கூறுகிறார்.பின்னர் மூர்த்தியிடம் ஊருக்கு போன வேலை என்னாச்சு என்று கேட்கிறார்.அதற்கு மூர்த்தி பதில் சொல்லுகிறார்.அதோடு இன்றைய எபிசொட் நிறைவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here