IPL தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (ஏப்ரல் 14) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி போட்டியின் போது மழை குறுக்கிடாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
LPG சிலிண்டர் பயனாளிகளுக்கு ஹேப்பி., இந்த மாதம் முதல் தான் மானியம்? வெளியான முக்கிய தகவல்!!!
அதாவது மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், அதிகபட்ச வெப்பநிலை 33 C மற்றும் குறைந்தபட்சம் 26 C என்று வானிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 26 கிமீ / 12 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போட்டி நடைபெறும் நாள் முழுவதிலும் மழை அச்சுறுத்தல் இருக்காது என தெரிகிறது. இதனால் நாளை இரவு தடையற்ற போட்டியை எதிர்பார்க்கலாம்.