இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே நடந்த போரில், காஸா பகுதியில் இருந்த பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டை போல, நடப்பாண்டிலும் இஸ்ரேல் மீது ஈரான் இணையவழி தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் அல்லது இஸ்ரேல் நாட்டுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம். அதே போல் இந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அந்தந்த தூதரகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
Enewz Tamil டெலிக்ராம்
ஐபிஎல் 2024: CSK vs MI போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!