நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி பல்வேறு சலுகை அறிவிப்புகளை, மத்திய அரசு வெளியிட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இலவச LPG சிலிண்டர் இணைப்புகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இத்திட்டம் 2024 மார்ச் வரை செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ஓராண்டிற்கு (2025 மார்ச் வரை) நீட்டித்துள்ளதாக அண்மையில் அறிவித்தனர்.
போலீஸ் அதிகாரிகளுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்.. வெளியான முக்கிய தகவல்!!
அதேபோல் LPG சிலிண்டருக்கான மானியத் தொகையும் ரூ.200 லிருந்து ரூ.300 ஆக உயர்த்தி, மாதந்தோறும் வழங்க உள்ளனர். இந்த மானியம் 2024 ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் சுமார் 9 கோடி நுகர்வோர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.