புவி வெப்பமயமாதலால் இயற்கை சூழ்நிலைகள் முற்றிலுமாக மாறி வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தால் பல்வேறு நோய்த்தொற்றுகள் அடுத்ததடுத்து பரவிய வண்ணம் உள்ளது. இதையடுத்து சீனாவில் பரவிய கொரோனா போல கடந்த செப்டம்பர் மாதம் உகாண்டாவில் எபோலா உயிர்கொல்லி வைரஸ் கண்டறியப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதிவேகமாக பரவிய எபோலா வைரஸ் நாடு முழுவதும் 9 மாவட்டங்களுக்கு ஊடுருவியது. இதனால் 164 பேர் பாதிக்கப்பட்டு 55 நபர்கள் உயிரிழந்தும் உள்ளனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவக் கண்காணிப்பு போன்ற முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை உகாண்டா அரசு மேற்கொண்டது.
அசைவ பிரியர்களுக்கு ஷாக்.., இனி பிரியாணியில் இதெல்லாம் சேர்க்க தடை! வெளியான கண்டிஷன்!!
இந்நிலையில் கடந்த நவம்பர் 30ம் தேதி கடைசியாக பாதிக்கப்பட்டவர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இதையடுத்து தற்போது வரை எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பதிவாகாததால் முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 42 நாட்கள் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்றால் முழுவதுமாக நீங்கியது என கூறியுள்ளனர்.