தமிழக பள்ளி ஆசிரியர்களே., நாளை (ஏப்ரல் 17) விடுமுறை கிடைக்குமா? கல்வித்துறைக்கு பரந்த கோரிக்கை!!!

0
தமிழக பள்ளி ஆசிரியர்களே., நாளை (ஏப்ரல் 17) விடுமுறை கிடைக்குமா? கல்வித்துறைக்கு பரந்த கோரிக்கை!!!
தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தில் பயிலும் 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வருகிற ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேர்வுக்கு மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனாலும் ஆசிரியர்கள், ஏப்ரல் 26ஆம் தேதி வரையிலும் பள்ளிக்கு வர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். இந்த சூழலில் நாளை மறுநாள் (ஏப்ரல் 18) மற்றும் ஏப்ரல் 19ஆம் தேதி, தேர்தல் பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.
இதன் காரணமாக நாளை (ஏப்ரல் 17) ஒருநாள் மட்டும் பள்ளி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் தேர்வுத்துறை இயக்குநர் அவர்களிடம், கோரிக்கை கடிதத்தையும் சமர்ப்பித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here