IPL தொடரின் 17வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, நாளுக்கு நாள் சர்ச்சை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது இவர் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதாவது T20 உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா அதிக அளவில் பந்து வீச வேண்டும் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பவுலிங்கில் அவர் மீண்டும் பழைய FORM- க்கு திரும்ப வேண்டும் என்பதற்காக இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.