மக்களவை தேர்தல்: சென்னையிலிருந்து கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் இன்னும் இரு தினங்களில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் பல்வேறு முன்னேற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி இருக்கும் பலரும், தங்களது சொந்த தொகுதிக்கு வாக்களிக்க செல்லும் விதமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை to கோவை மற்றும் தாம்பரம் to கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி,

  • ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மாலை 04.25 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
  • அதேபோல் ஏப்ரல் 18, 20 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு, மாலை 04.45 மணிக்கு புறப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
  • மறுமார்க்கமாக ஏப்ரல் 19, 21 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி to தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான Question Bank தொகுப்பு., பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here